Showing posts with label ஜோதிடம். Show all posts
Showing posts with label ஜோதிடம். Show all posts

Friday, October 14, 2016

வாஸ்து வழிகாட்டி-சக்தி விகடன்

உங்கள் இல்லத்தில் குறைகள் நீங்கிட, வளங்கள் பெருகிட

வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள்

 

வளம் தரும் வாஸ்து!

குடும்ப வாழ்க்கையில் உழன்று கொண்டிருக்கும் மக்களுக்கு வீடு என்ற ஒன்று அவசியம். சாஸ்திரம் சொன்னபடி சந்நியாஸ தர்மத்தில் தங்களை அர்ப்பணித்து வாழும் சந்நியாஸிகளுக்கு ஆசிரமம் என்பது முக்கியம். நாட்டைக் காக்கும் மன்னனுக்கு அரண்மனை அவசியம். உலகில் பிறந்த ஜீவன்கள் வழிபட்டுத் தங்களை தூய்மைப் படுத்திக்கொள்ள ஆலயம் அவசியம். இங்கே சொல்லப்பட்ட வீடு, ஆசிரமம், அரண்மனை, ஆலயம் ஆகிய அனைத்துமே வாஸ்து சாஸ்திர முறைப்படி கட்டப்பட்டிருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் அங்கு சுகமும் நிம்மதியும் உண்டாகும்.

Saturday, September 24, 2016

கனவுகளும் பலன்களும்!

சொப்பன சாஸ்திரம் என்ன சொல்கிறது?‘ஜோதிட மாமணி’ கிருஷ்ணதுளசி

 

னவுகளைப் பற்றி விளக்கும்போது, ‘நினைவுகளின் கற்பனை வடிவம்தான் கனவு’ என்றும், ‘மனதின் அடித்தளத்தில் புதையுண்டு இருக்கும் நினைவுகளின் வெளிப்பாடே கனவுகள்’ என்றும் சொல்லப் படுகிறது. பொதுவாக வாதம், பித்தம், கபம் ஆகிய தாதுக்களின்

Thursday, September 1, 2016

உடலின் இந்த பகுதிகளில் மச்சம் இருந்தால், அவரிடம் செல்வம் கொட்டும் என்பது தெரியும...

உலகில் பிறந்த ஒவ்வொருவரின் உடலிலும் தனிப்பட்ட அடையாளத்தைக் குறிக்கும் வகையில் மச்சம் இருக்கும். பண்டைய முனிவர்கள், உடலில் அடையாளமாக உள்ள மச்சத்தை ஆராய்ந்ததில், அது ஒருவரின் தனிப்பட்ட குணாதிசயம் மற்றும் எதிர்காலத்துடன் தொடர்புள்ளதாக தெரிய வந்தது.

Wednesday, April 6, 2016

துர்முகி வருட ராசி பலன்கள்(14.4.2016 முதல் 13.4.2017 )

எளிய பரிகாரங்களுடன்!`ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன்

மேஷம் (அசுவினி, பரணி கிருத்திகை 1-ம் பாதம்)

நாலும் தெரிந்த அனுபவசாலி நீங்கள்!

Sunday, January 10, 2016

சாயா கிரகங்கள் சாதிக்க வைக்குமா?

ராகு-கேது பொதுப்பலன்கள்!

நிகழும் மன்மத வருடம் மார்கழி மாதம் 23ம் நாள் (8.1.16) வெள்ளிக்கிழமை, கிருஷ்ணபட்ச சதுர்த்தசி திதி, மூலம் நட்சத்திரம், 'விருத்தி’ நாமயோகம், 'சகுனி’ நாம கரணம், ஜீவன் நிறைந்த அமிர்த யோக நாளில், நண்பகல் 12 மணிக்கு ராகு பகவான் கன்னியில் இருந்து சிம்மத்துக்கும், கேது பகவான்  மீனத்தில் இருந்து கும்ப ராசிக்கும் இடம் பெயர்கின்றனர்.

Thursday, December 24, 2015

2016 புத்தாண்டு ராசிபலன்கள்-கடகம்

பிரதிபலன் பாராமல் உதவுபவர் களே!

உங்களின் யோகாதிபதி செவ் வாய் கேந்திர பலம் பெற்று அமர்ந்தி ருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால், எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை பிறக்கும். உங்களின் புகழ், கௌரவம் உயரும். சொந்த வீடு சிலர் வாங்குவீர்கள். புதிய பதவி தேடி வரும். பிள்ளை களிடம் குவிந்து கிடக்கும் திறமை களை இனம் கண்டறிந்து வளர்ப் பீர்கள். வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும்.

2016 புத்தாண்டு ராசிபலன்கள்-மிதுனம்

.

கனிவாகப் பேசி காய் நகர்த்து பவர்களே!

உங்களுடைய ராசியை ராசி நாதன் புதனும், சேவகாதிபதி சூரிய னும் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் புத்தாண்டு பிறப்பதால், ஆரோக்கியம் கூடும். உங்களிடம் மறைந்து கிடந்த திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் அமையும். விலை உயர்ந்த மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். அவ்வப்போது உடல் உஷ்ணம் அதிகமாகும். எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை பிறக்கும். துணிச்ச லாக சில முக்கிய முடிவுகள் எடுப் பீர்கள். கொடுத்த கடன் திரும்ப வரும். 

2016 புத்தாண்டு ராசிபலன்கள்-ரிஷபம்

அதிகாரத்துக்கு அடிபணியாத வர்களே!


உங்கள் ராசிக்கு சுக வீட்டில் சந்திரன் நிற்கும்போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால், உங்களுடைய அடிப்படை வசதிகளை மேம்படுத்த திட்டமிடுவீர்கள். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். வீட்டில் உங்கள் ரசனைக்கேற்ப சில மாற்றங்கள் செய்வீர்கள். வங்கியில் லோன் கிடைத்து அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். நவீன ரக வாகனம் வாங்குவீர்கள். 


2016 புத்தாண்டு ராசிபலன்கள்-மீனம்

இரக்க குணம் அதிகம் உள்ளவர் நீங்கள்.

உங்களுடைய ராசிக்கு 10ம் வீட்டில் சூரியனும், புதனும் பலம் பெற்றிருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால், சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். கம்பீரமாகப் பேசி காரியம் சாதிப்பீர் கள். பணவரவு அதிகரிக்கும். சுக்ரன் சாதகமாக இருப்பதால், தன்னிச்சையாகச் செயல்பட்டு முன்னேற நினைப்பீர்கள். இளைய சகோதர வகையில் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

2016 புத்தாண்டு ராசிபலன்கள்-கும்பம்

உழைப்பால் சாதிப்பவர் நீங்கள்.

உங்கள் ராசிக்கு 7வது வீட்டில் சந்திரன் அமர்ந்து உங்களைப் பார்த்துக்கொண்டிருக்கும் நேரத்தில் இந்த 2016ம் வருடம் பிறப்பதால், அரைகுறையாக நின்ற வேலைகள் முழுவதுமாக முடியும். திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிட்டும். மனஇறுக்கம் குறையும். திட்டமிட்டுச் செயல்படுவீர்கள். கணவன்மனைவிக்குள் அந்நியோன்னியம் அதிகரிக்கும்.

2016 புத்தாண்டு ராசிபலன்கள்-மகரம்

கற்பூர புத்தி கொண்டவர் நீங்கள்.

உங்களின் சுகாதிபதியும், லாபாதிபதியுமான செவ்வாய், 10ல் வலுவாக அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்த ஆண்டு பிறப்பதால், வெற்றி பெற்ற மனிதர்களின் நட்பு கிடைக் கும். உயர்ந்த பதவிக்கு உங்களது பெயர் பரிந்துரை செய்யப்படும். சொத்து வாங்குவது, விற்பது நல்ல விதத்தில் முடியும். ஆனால், எட்டா வது ராசியில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் அலைச்சலும், உடல் நலக் குறைவும், வீண் விரயங்களும் வந்து போகும்.

2016 புத்தாண்டு ராசிபலன்கள்-தனுசு

சுதந்திர மனப்பான்மை கொண் டவர் நீங்கள்.

உங்களுக்கு 9வது ராசியில் இந்த ஆண்டு பிறப்பதால், உங்க ளின் இலக்கை நோக்கி முன்னேறு வீர்கள். பணப் புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடு ஆகும். பிதுர்வழிச் சொத்து கைக்கு வரும். தந்தையாரின் ஆரோக்கியம் சீராகும். வழக்கு சாதகமாகும். பிரிந்திருந்த கணவன்மனைவி ஒன்று சேருவீர்கள். தந்தை வழி உறவினர்களால் ஆதாயம் அடைவீர்கள்.

2016 புத்தாண்டு ராசிபலன்கள்-விருச்சிகம்

மன்னிக்கும் குணம் கொண்ட வர் நீங்கள்.

இந்தப் புத்தாண்டு உங்கள் ராசிக்கு 10ம் வீட்டில் சந்திரன் நிற்கும்போது பிறப்பதால், உங்கள் நிர்வாகத் திறமை அதிகரிக்கும். புது பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப் படுவீர்கள். அரசால் ஆதாயம் உண்டாகும். வருடம் பிறக்கும்போது சூரியனும், புதனும் 2ல் நிற்பதால், கம்பீரமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். எதிர்பாராத பண வரவு உண்டு. பூர்வீகச் சொத்தால் வருமானம் வரும். உங்கள் ராசி நாதன் செவ்வாய், ராசிக்கு 12ல் நிற்கும்போது புத்தாண்டு பிறப்பதால் சிக்கனமாக இருக்க நினத்தாலும் முடியாமல் போகும். சிலர் அயல்நாடு சென்று வருவீர்கள்.

2016 புத்தாண்டு ராசிபலன்கள்-துலாம்

மற்றவர்களை மதிக்கத் தெரிந்தவர்களே!

உங்கள் ராசிக்கு பதினோராவது வீட்டில் இந்த 2016ம் ஆண்டு பிறப்பதால், பெரிய திட்டங்கள் தீட்டுவீர்கள். உங்களுடைய ஆளுமைத் திறன் அதிகரிக்கும். பதவிகள் தேடி வரும். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். நவீன ரக வாகனம் மற்றும் எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் வாங்குவீர்கள்.

சூரியனும், புதனும் 3ம் வீட்டில் அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்த ஆண்டு பிறப்பதால், அரசாங்கக் காரியங்கள் முடியும். வீடு கட்ட எதிர்பார்த்த பணம் வரும். நல்ல வேலை கிடைக்கும்.

2016 புத்தாண்டு ராசிபலன்கள்-கன்னி

தன்மானம் தவறாதவர்களே!

உங்கள் ராசிக்கு சுக ஸ்தா னத்தில் சூரியனும் புதனும் அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால், தன்னம் பிக்கை கூடும். எதிலும் முதலிடம் பிடிப்பீர்கள். தாயாரின் ஆரோக்கியம் கூடும். அரசாங்கம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் சாதகமாக முடியும். பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். உறவினர்களிடையே மதிப்பு மரி யாதை கூடும். ஆனால், உங்கள் ராசிக்கு 12ம் வீட்டில் சந்திரன் நிற்கும்போது இந்த ஆண்டு பிறப்பதால், நெருங்கிய உறவுக்காரர் களுடைய திருமணத்துக்கு செலவு செய்யவேண்டி வரும். செவ்வாய் 2ல் நிற்பதால், வீண் விரயங்கள், சின்னச் சின்ன கவலைகள், கண் எரிச்சல் வந்து செல்லும். 

2016 புத்தாண்டு ராசிபலன்கள்-சிம்மம்

தொடங்கியதை எப்பாடு பட்டாவது முடிப்பவர்களே! 

உங்களின் பாக்கியாதிபதி செவ்  வாய் 3ம் இடத்தில் பலம் பெற்றி ருக்கும் நேரத்தில் இந்த 2016ம் ஆண்டு பிறப்பதால், புதிய முயற் சிகள் அனைத்தும் வெற்றியடையும். பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். மனக்கலக்கத்துடன் முடங்கிக் கிடந்த நீங்கள் இனி துடிப்புடன் செயல்படத் தொடங்கு வீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். குடும்பத்தில் அமைதி நிலவும். முடிந்ததை முயற்சித்து முன்னுக்கு வரப் பார்ப்பீர்கள். சகோத ரர்களுக்கிடையே ஒற்றுமை பிறக் கும். பிள்ளைகள் ஆக்கப்பூர்வமாக செயல்படுவார்கள். சொத்து சம்பந்தப் பட்ட வழக்கில் நல்ல தீர்ப்பு வரும்.

Friday, June 19, 2015

குரு பெயர்ச்சி பலன்கள் (06.07.15 முதல் 01.08.16 வரை)-மீனம்

மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) 100/ 55 (தடைகள் தகரும் வெற்றி நிலைக்கும்)

உள்ள உறுதியுடன் உழைப்பில் ஈடுபடும் மீனராசி அன்பர்களே! 

குரு பகவான் உங்கள் ராசிக்கு 5ல் இருந்து நன்மைகளை வாரி வழங்கி வந்தார். அவரால் குடும்ப நலன் மேம்பட்டிருக்கும். கையில் பணப்புழக்கத்தை தந்திருப்பார். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்தி வைத்திருப்பார். பிள்ளைகளால் பெருமை கிடைத்திருக்கும். பெண்களால் முன்னேற்றம் அடைந்திருப்பீர்கள். இந்த நிலையில் குரு பகவான் ராசிக்கு 5ல் இருந்து 6-ம் இடத்திற்கு அடியெடுத்து வைக்கிறார். இது சாதகமானது அல்ல. 5ல் இருந்தது போல நன்மையை அவரால் கொடுக்க முடியாது. அதே நேரம் பிற்போக்கான பலனை அவர் தர மாட்டார். பொதுவாக 6ல் இருக்கும் போது, உடல்நலத்தை

குரு பெயர்ச்சி பலன்கள் (06.07.15 முதல் 01.08.16 வரை)-கும்பம்

கும்பம்: (அவிட்டம் 3,4,சதயம், பூரட்டாதி 1,2,3) 100/80 (ஏணியாய் இருப்பார் ஏழாமிடத்து குரு)

மற்றவர் தயவை எதிர்பார்க்காத கும்ப ராசி அன்பர்களே!

குருபகவான் இதுவரை உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தில் இருந்தார். அவர் மன நிம்மதியை
இழக்கச் செய்திருப்பார். உங்கள் நிலையில் இருந்து தடுமாற்றத்தை ஏற்படுத்தி இருப்பார். பொருளாதார சரிவு ஏற்பட்டிருக்கும். வீண் பகையும், விரோதமும் உருவாகியிருக்கும். பல்வேறு தொல்லைகளை அனுபவித்து இருப்பீர்கள். இப்போது குரு பகவான் 6-ம் இடத்தில் இருந்து 7-ம் இடத்திற்கு செல்வது மிகவும் உயர்வான நிலை. மேலும் குருவின் 5-ம் இடத்துப் பார்வையும் சிறப்பாக உள்ளது. எனவே, குரு குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரித்து சுப நிகழ்ச்சியைத் தருவார். செல்வாக்கு மேம்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். எண்ணற்ற பல வசதிகள் கிடைக்கும். டிசம்பர் 20-ந் தேதி, குரு சிம்மத்தில் இருந்து கன்னி ராசிக்கு அதிசாரமாகச் செல்கிறார். இதுசிறப்பான இடம் அல்ல. பொருளாதர சரிவையும், மனவேதனையும், எதிரிகளால் தொல்லையையும் தரலாம். ஆனால், அவரது 7-ம் இடத்துப்பார்வையால், எந்த பிரச்னையையும் முறியடிக்க வாய்ப்பு  கிடைக்கும். சனி

குரு பெயர்ச்சி பலன்கள் (06.07.15 முதல் 01.08.16 வரை)-மகரம்

மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2,) 100/55 (இடம் எட்டானாலும் பார்வை ஏழால் பலன்)

குடும்பத்தின் மீது அதிக பாசம் கொண்ட மகரராசி அன்பர்களே!

இதுவரை, குருபகவான் உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தில் இருந்து பல்வேறு நன்மைகளை செய்து கொண்டிருந்தார். உங்கள் செல்வாக்கு உயர்ந்திருக்கும். நினைத்ததை நிறைவேற்றி இருப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரித்திருக்கும். தேவைகள் பூர்த்தியாகி இருக்கும். வீடு மனை வாங்கி இருப்பீர்கள். அல்லது வசதியான வீட்டிற்கு குடிபுகுந்து இருப்பீர்கள். சிலர் வாகனம் வாங்கி இருக்கலாம். இந்த நிலையில் இப்போது குரு 8-ம் இடத்திற்கு அடியெடுத்து வைத்திருக்கிறார். இது அவ்வளவு சிறப்பான நிலை அல்ல. அஷ்டம குரு பகவான் பொதுவாக மன வேதனையும், நிலையற்ற தன்மையையும் கொடுப்பார். பொருளாதார சரிவை ஏற்படுத்துவார். வீண் விரோதத்தை உருவாக்குவார். சிரமங்களைத் தருவார் என்பது பொதுவான ஜோதிட வாக்கு. ஆனால் இதைக் கண்டு நீங்கள் அஞ்ச வேண்டாம்.

குரு பெயர்ச்சி பலன்கள் (06.07.15 முதல் 01.08.16 வரை)-தனுசு

தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) 100/70 (ஒன்பதாம் இட குரு உயர்த்துவார் உங்களை)

பெரியோர்களிடம் நன்மதிப்பு கொண்ட தனுசு ராசி அன்பர்களே!

குரு பகவான் இதுவரை உங்கள் ராசிக்கு 8-ம் இடத்தில் இருந்து வந்தார். இது சிறப்பான நிலை அல்ல என்று சொல்வதை விட கொடூரமான நிலை என்றே சொல்லலாம். 8-ல் குரு இருக்கும்போது பல்வேறு இன்னல்களை தந்திருப்பார். குறிப்பாக மனவேதனை அதிகமாக உங்களை வாட்டி இருக்கும். பொருளாதாரத்தில் திடீர் சரிவுகள் ஏற்பட்டிருக்கும். உறவினர்கள், நண்பர்கள் அனுகூலமாக இருந்திருக்க மாட்டார்கள். வீண் விரோதம் உருவாகியிருக்கலாம். இந்த நிலையில் குரு தற்போது 9-ம் இடமான சிம்ம ராசிக்கு செல்கிறார். இது மிகச்சிறப்பான இடம். இதுவரை அவரால் பட்ட இன்னல்களில் இருந்து விடுபடுவீர். அவரால் மனமகிழ்ச்சி அதிகரிக்கும். உற்சாகம் பிறக்கும். நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தி ஆகும். குடும்பத்தில் இருந்த பின்னடைவு மறையும். கணவன், மனைவி இடையே ஒற்றுமை மேலோங்கும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். உங்களை புரிந்துகொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை வரலாம். தடைபட்டு வந்த திருமணம் நடக்க வாய்ப்பு உண்டு. இவை அனைத்தும் குருவால் கிடைக்கும் நற்பலன்கள். இது தவிர குருவின் 9-ம்