Showing posts with label இயற்கை உணவுகள். Show all posts
Showing posts with label இயற்கை உணவுகள். Show all posts

Saturday, October 15, 2016

மூலிகை டீ, காபி 32

நலம் தரும் மூலிகை டீ, காபி

கோடை, மழை, குளிர் என எந்தப் பருவமாக இருந்தாலும் சுடச்சுட தேநீர் அல்லது ஒரு கப் காபி அருந்தினால்தான் பலருக்குப் பொழுதே விடியும். விருந்தினர் வந்தால்கூட காபி கொடுத்து உபசரிப்பதுதான் நம் பண்பாடு. உண்மையில், டீ, காபி சாப்பிடும் பழக்கம் நமக்குக் கடந்த தலைமுறையில்தான் ஏற்பட்டது என்றால் நம்ப முடியுமா? வீட்டிலேயே எளியமுறையில் தயாரிக்கக்கூடிய ஆரோக்கியமான டீ, காபிகளைத் தயாரித்துக் காட்டியிருக்கிறார் சமையல் கலை நிபுணர் கிருஷ்ணகுமாரி ஜெயக்குமார். அதன் பலன்களைச் சொல்கிறார் சித்தமருத்துவர் ரமேஷ்.

துளசி டீ

தேவையானவை: துளசி இலைகள் - 10 - 20, ஏலக்காய் - 4, சுக்கு - அரை அங்குலத்துண்டு, தேன் - 2 டீஸ்பூன், பால் - கால் கப்.

Thursday, October 13, 2016

தேன் உன்னும் அருமருந்து!

மிழர்களுடைய மரபு சார்ந்த உணவுகளில் தேனுக்கு அதிமுக்கியத்துவம் உண்டு. அத்தகைய தேன், உடல் அழகை மெருகேற்றுவதற்குப் பலவகைகளில் உதவுகிறது.

முகப்பரு: முகப்பரு வந்த இடத்தில் தினமும் தேன் தடவி , 10 நிமிடம் ஊறவைத்து, முகத்தைக் கழுவி வந்தால், அதிலிருக்கும் பாக்டீரியாவை அழித்து, முகப்பருக்கள் பரவாமல் பார்த்துக்கொள்ளும்.

Monday, October 10, 2016

உடல் எடை குறைக்கும் நம்ம ஊர் உணவுகள்!

டல் எடையைக் குறைக்க பல்வேறு டயட் முறைகளைப் பின்பற்றுவது ஃபேஷனாக உள்ளது.  உடல் எடை குறைய ஸ்பெஷல் இன்கிரீடியன்ஸ் ஏதேனும் உள்ளதா என்று தேடி அலைபவர்களுக்கு, நம் வீட்டு சமையல் அறையிலேயே அதற்கு தீர்வு உள்ளளது என்பது தெரிவதில்லை. நம் ஊரின் பாரம்பர்ய உணவிலேயே எடையைக் குறைக்கும் ரகசியங்கள் உள்ளன.

கேழ்வரகு

Sunday, September 25, 2016

ஊளைச் சதை குறைக்கும் கொள்ளு!

கொள்ளு அல்லது கொள் என்பது பயறு வகையைச் சேர்ந்தது. தென்தமிழகத்தில் காணம் என்று சொல்வார்கள். முதிரை என்ற பெயரும் உண்டு. `இளைத்தவனுக்கு எள்ளு; கொழுத்தவனுக்கு கொள்ளு’ என்ற பழமொழியே நமக்கு ‘கொள்ளு’வின் சிறப்பை தெரிவித்துவிடும்.

Tuesday, September 20, 2016

வினையில்லா தினை

தினை, உலகிலேயே அதிகம் பயிரிடப்படும் தானிய வகை. சாகுபடியில், சீனா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் இருக்கின்றன. பழங்காலத்தில், முதலாவதாக பயிரிட்டு, மனிதனால் உபயோகிக்கப்பட்ட தானிய வகை தினை தான்.

Friday, September 2, 2016

நல்ல கொழுப்பை அதிகரிக்கும் தேங்காய்!

செப்டம்பர் 2 - உலக தேங்காய் தினம்

 

தென்னையை ‘பூலோகக் கற்பகவிருட்சம்’ என்பார்கள். தருவதில் தாயைப் போன்ற தயாள குணம்கொண்டது தென்னை. தென்னம் பாளை, குருத்து, இளநீர், தேங்காய், தேங்காய் எண்ணெய் என ஒவ்வொரு நிலையிலும் மனிதருக்கு உணவாகவும் மருந்தாகவும் பயன்படுகிறது. தென்னை ஓலைகளில் பட்டு வரும் குளிர்ச்சியான காற்று, நம் உடலில் உள்ள சுரப்பிகளைத் தூண்டி நலம் சேர்க்கும். தென்னை ஓலையில் கூரை வேய்வது இதனால்தான்.

உருளைக்கிழங்கு தோலே... உனக்கு இவ்வளவு சத்துக்களா

# உருளைக் கிழங்கு தோலில் இருக்கும் அபரிமிதமான பொட்டாஷியம் சத்து, ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தக் கூடியது.
# தோலில் உள்ள நார்ச்சத்து, ரத்தக் கொழுப்பை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது.

Saturday, July 9, 2016

சிறிய விதைகள் பெரிய பலன்கள்

சூரியகாந்தி விதை

இதில் நிறைவாக உள்ள வைட்டமின் இ திசுக்கள் ஆக்சிஜன் பயன்படுத்துவதால் உருவாகும் ஃப்ரீ ராடிக்கல்ஸ் பிரச்னையைத் தவிர்க்கிறது. செலீனியம், டி.என்.ஏ அளவில் ஏற்படக்கூடிய பாதிப்புகளை நீக்குகிறது. மக்னீசியம் வலுவான எலும்புக்கு உதவுவதுடன், ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்க, தசைகளில் ஏற்படும் அதிகப்படியான இறுக்கத்தைப் போக்க உதவுகிறது. சோர்வு, ஒற்றைத் தலைவலி போன்றவற்றையும் போக்குகிறது.

Friday, July 8, 2016

நலம் தரும் நார்ச்சத்து

நார்ச்சத்து... நாம் உட்கொள்ளும் இயற்கை உணவில் நிறைந்து இருக்கும், ஆனால் உடலுக்கு எவ்வித ஊட்டச்சத்துக்களையும் அளிக்காத ஒரு பொருள். இதுமட்டும் இல்லை என்றால், நம்முடைய செரிமான மண்டலத்தின் செயல்பாடே கேள்விக்குறியாகிவிடும். அந்த அளவுக்கு அத்தியாவசியமான பொருள். நாம் உட்கொள்ளும் உணவு செரிக்கப்பட்டு சிறுகுடல், பெருங்குடல், மலக்குடல் வழியே பயணித்து வெளியேற வேண்டும். இப்படி ஒவ்வொரு பகுதியாகப் பயணிக்கும்போதுதான் அதில் உள்ள ஊட்டச்சத்துக்களை உடல் கிரகித்துக்கொள்ளும். நார்ச்சத்து இல்லாத உணவை உட்கொள்ளும்போது அது உணவின் செரிமான மண்டலப் பயணத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

Wednesday, July 6, 2016

புளியை உணவில் சேர்த்து கொள்வதால் என்னென்ன நன்மைகள் உண்டாகும் ?

புளியை சேர்த்துக் கொள்ளாமல் தென்னிந்தியாவில் குறிப்பாக நம் தமிழ் நாட்டில் உணவுவகைகளே இல்லை. புளிக் குழம்பு, ரசம், சாம்பார், துவையல் என இதனை சேர்த்திடாத உணவு பதார்த்தங்கள் மிகக் குறைவு.

இதன் புளிப்பு சுவை உணவில் ருசியை சேர்த்திடும். ஆனால் புளியை அதிகமாய் சாப்பிடக் கூடாதென்று நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அது உண்மையல்ல. காரணம் காய்கறிகள் புளியுடன் வேகும்போது, காய்கறிகளின் சத்துக்கள் முழுவதும் நமக்கு கிடைக்கிறது.

Saturday, April 30, 2016

கோடைக்கு கொய்யா

ஐதராபாத்தில் உள்ளது தேசிய உணவியல் நிறுவனம். சமீபத்தில், இந்நிறுவனம் ஒரு ஆராய்ச்சி முடிவை வெளியிட்டது. உலகில் உள்ள பழங்களிலேயே மிகச் சிறந்த பழம் எது என்பது தான், இந்த மருத்துவ ஆராய்ச்சிக்காக ஸ்ட்ரா பெர்ரி, புளூ பெர்ரி என்று, உலகின் அனைத்து

Thursday, March 31, 2016

மூலிகை மந்திரம்: பீர்க்கங்காய்

நம்முடைய உணவில் முக்கியமான அங்கம் வகிக்கும் காய்கறி வகைகளில், மிக முக்கியமான இடத்தை பீர்க்கங்காய்க்குக் கொடுக்கலாம். அந்த அளவுக்குப் பல நோய்கள் வராமல் தடுக்கும் குணம் கொண்டது என்பதுடன் வந்த நோயை விரட்டும் திறனும்

Monday, March 28, 2016

கரும்புள்ளிகள் கொண்ட வாழைப்பழங்களை சாப்பிடுவதால் பெறும் நன்மைகள்!

அனைத்து வகை மக்களும் எளிதில் வாங்கி சாப்பிடக்கூடிய வகையில் விலை மலிவில் கிடைக்கும் ஓர் பழம் தான் வாழைப்பழம். இத்தகைய வாழைப்பழங்களில் ஏராளமான நன்மைகள் அடங்கியுள்ளன என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.

பலரும் வாழைப்பழத்தில் கரும்புள்ளிகள் இருந்தால், அதனை வாங்க மறுப்போம். உண்மையில் வாழைப்பழங்களில் கரும்புள்ளிகள் ஏற்படுவதற்கு அவை நன்கு கனிந்திருப்பது தான் காரணம்.

Thursday, March 24, 2016

பிளட் பிரஷரை குறைக்கும் தர்பூசணி!

 

ரிசி, சர்க்கரை, உப்பு உள்ளிட்ட வெள்ளை நிறத்திலான உணவுகள் பலவற்றை உடலுக்குக்குக் கெடுதல் என்பார்கள். ஆனால், வெள்ளைப் பூசணிக்காய்க்கு நிறைய மருத்துவக் குணங்கள் உள்ளன. இதேபோல் தர்பூசணியில் சிவந்த சதைப்பாகம் மட்டுமல்லாது தோலை ஒட்டியிருக்கும் வெள்ளை நிற சதைப்பாகத்துக்கும் நிறைய மருத்துவக் குணங்கள் உள்ளன.

Saturday, March 19, 2016

சிறுதானியம்... பெரும் பலன்கள்!

றுமாதக் குழந்தை முதல் அனைவருக்கும் ஏற்ற சத்தான உணவு சிறுதானியம். ஒவ்வொரு சிறுதானியத்துக்கும் தனித்துவச் சிறப்புகள் உள்ளன. எந்தெந்த சிறுதானியத்தில் என்னென்ன சிறப்புகள் என்பதைத் தெரிந்துகொண்டால், அவற்றைப் பயன்படுத்தி உடலை வலுப்படுத்திக்கொள்ள உதவியாக இருக்கும்.

Friday, March 18, 2016

மூட்டுவலி போக்கும் முடக்கத்தான் கீரை

நம்மில் பலரும் மூட்டுவலியினால் (ஆர்த்ரைடிஸ்) அவதிப்படுகிறோம். இதற்கான மூலகாரணம், நாம் அறியவேண்டியது ஒன்று. நாம் சிறுவயதில் ஓடியாடி விளையாடுகிறோம். சிறு வயதில் சிறுநீர் கழிக்க வேண்டுமானால் உடனடியாக செய்து விடுகிறோம்.
வயதானால் நல்ல டாய்லட் தேடியோ, வேறு பல காரணங்களாலோ

Monday, March 7, 2016

சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும் கிரீன் டீ

உடலும், மனமும் சோர்வடைந்த நிலையில், ஒரு கப் டீ குடித்தால், புத்துணர்ச்சி கிடைக்கும் என்பது, அனைவரும் அறிந்த உண்மை. சாதாரண டீயை விட, கிரீன் டீ யை பருகுவதால் ஏகப்பட்ட மருத்துவ நன்மைகள் கிடைக்கின்றன, என்கிறது மருத்துவ ஆய்வுகள்.
பசுந்தேயிலையின் கொழுந்து, இளம் இலையில் இருந்து

Saturday, March 5, 2016

ஆரோக்கியம் தரும் சுக்கு மல்லி காபி

தமிழகத்தில் பழங்கால மக்களிடம் காபி, டீ, குடிக்கும் பழக்கம் இல்லை. 17ம் நூற்றாண்டுக்கு பிறகுதான், தேனீர் பருகும் பழக்கம் வந்தது. அதுவும் ஒரு குறிப்பிட்ட பகுதி மக்களிடம் மட்டும்தான் இருந்ததே தவிர பரவலாக இல்லை.

Friday, March 4, 2016

அகத்திக்கீரையால் பீ.பி., கட்டுப்படும்

ங்கு இல்லாத உணவாகவும், நோய் தீர்க்கும் மருந்தாகவும் இருப்பது கீரைகள் மட்டுமே. எல்லா கீரையிலும், நோய் போக்கும் மருத்துவ குணம் இருக்கிறது. இதில் அகத்திக்கீரை ரத்த அழுத்த நோய்க்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

Friday, January 22, 2016

கொழுப்பு சத்தை குறைக்கும் வெண்பூசணி

வெண்பூசணி பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. இதற்கு சாம்பல் பூசணி, கல்யாண பூசணி என்ற பெயர்கள் உள்ளன. இது, பொங்கல் காலகட்டத்தில் அதிக அளவில் விளையும். நுண்கிருமிகளை தடுக்க கூடிய தன்மை கொண்ட வெண் பூசணியின் பூ, காய், இலை, விதை ஆகியவற்றில் மருத்துவ குணங்கள் உள்ளன. வெண்பூசணியை பயன்படுத்தி இதயத்தை பலப்படுத்தும், ரத்தத்தை சுத்தப்படுத்தும்