பணிச்சுமை, பரபரப்பான ஓட்டம். இரண்டும்தான் இன்று நம்மில் பலரின் வாழ்க்கை. வேலை, குடும்பம், கடன்கள், சுமைகள் என நாலா பக்கமும் நெருக்க, மன அழுத்தம் அதிகரிக்கிறது. இதை எதிர்கொள்ள, நம் உடலுக்கு போதுமான அளவு ஓய்வு அளிக்க வேண்டும். இதற்கு, மூச்சுப் பயிற்சி, தியானம், யோகா போன்றவை, மனம் மற்றும் உடலின் ஆற்றல் அதிகரிக்க உதவும்.
நான் பார்த்த,படித்த எனக்கு பிடித்த செய்திகள், கட்டுரைகள்,துணுக்குகள்,வீடியோ,போட்டோக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்
Monday, October 31, 2016
Wednesday, October 19, 2016
சளியை அகற்றும் கண்டங்கத்திரி!
கண்டங்கத்திரி... இது கத்திரிக்காய் இனத்தைச் சேர்ந்த ஒரு சிறு செடியாகும். இதன் பூ கத்திரிச்செடியின் பூவைப்போலவே சிறிது சிவந்து இளம் ஊதா நிறத்தில் காணப்படும். இதற்கு பிரகதி, கண்டகாரி என்ற வேறு பெயர்களும் உண்டு. முட்கள் நிறைந்த இந்த
Saturday, October 15, 2016
மூலிகை டீ, காபி 32
நலம் தரும் மூலிகை டீ, காபி
கோடை, மழை, குளிர் என எந்தப் பருவமாக இருந்தாலும் சுடச்சுட தேநீர் அல்லது ஒரு கப் காபி அருந்தினால்தான் பலருக்குப் பொழுதே விடியும். விருந்தினர் வந்தால்கூட காபி கொடுத்து உபசரிப்பதுதான் நம் பண்பாடு. உண்மையில், டீ, காபி சாப்பிடும் பழக்கம் நமக்குக் கடந்த தலைமுறையில்தான் ஏற்பட்டது என்றால் நம்ப முடியுமா? வீட்டிலேயே எளியமுறையில் தயாரிக்கக்கூடிய ஆரோக்கியமான டீ, காபிகளைத் தயாரித்துக் காட்டியிருக்கிறார் சமையல் கலை நிபுணர் கிருஷ்ணகுமாரி ஜெயக்குமார். அதன் பலன்களைச் சொல்கிறார் சித்தமருத்துவர் ரமேஷ்.
துளசி டீ
தேவையானவை: துளசி இலைகள் - 10 - 20, ஏலக்காய் - 4, சுக்கு - அரை அங்குலத்துண்டு, தேன் - 2 டீஸ்பூன், பால் - கால் கப்.
Wednesday, October 5, 2016
மலேரியாவை விரட்டும் பப்பாளி இலைச்சாறு!
பப்பாளிப்பழம் மிக சாதாரணமாக கிடைக்கும் பழங்களுள் ஒன்று. இதில், ஜீரணத்தை தூண்டும் சக்தி இருப்பதால் அசைவ உணவு சாப்பிடுபவர்கள் பப்பாளிப்பழம் சாப்பிட்டு வந்தால் பலன் கிடைக்கும். தினசரி காலை உணவுக்குப்பதில் பப்பாளிப்பழம் சாப்பிடுவது நல்லது.
பப்பாளி குடல் நோய்களை குணமாக்குவதோடு, மலச்சிக்கல், மூல
Friday, September 23, 2016
டெங்குவை அழிக்கும் இயற்கை வைத்தியம்!
டெங்கு காய்ச்சலைப் பரப்பும் கொசுக்களை அழிப்பது கடினமாக இருந்தாலும், நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ளும் தடுப்பு முறைகளைப் பின்பற்றி டெங்கு காய்ச்சல் வராமல் தப்பிக்க முடியும். டெங்கு காய்ச்சலுக்கான மருத்துவமுறைகள் சித்த மருத்துவத்தில் உள்ளன.
Thursday, September 22, 2016
வேம்பின் மகிமை
வேப்பமரத்தின் இலை, பூ, காய், பழம் மற்றும் மரப்பட்டை எல்லாமே மருத்துவ குணம் வாய்ந்தவை. தமிழர் வாழ்வில் கலாசார ரீதியாகவும் மருத்துவ ரீதியாகவும் இரண்டறக் கலந்தது வேப்பமரம்.
*வேப்பிலையை அரைத்துக் கட்டினால், ஆறாத ரணம், பழுத்து உடையாத கட்டி, வீக்கம் ஆகியவை குணமாகும்
Tuesday, September 13, 2016
மஞ்சள்காமாலை வராமல் தடுக்கும் பீர்க்கன்காய்
பீர்க்கன்காய்... நீர்ச்சத்து நிறைந்த இந்தக் காயில், புரதம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து உள்ளிட்ட சத்துக்களும் விட்டமின்களும் நிறைந்துள்ளன.
Thursday, July 28, 2016
ஆண்மையை பெருக்கும் ஓரிதழ் தாமரை!
வயல்வெளிகளில் வளரக்கூடிய சிறு செடி, ஓரிதழ் தாமரை. ‘ரத்தின புருஷ்’ என்றொரு பெயரும் உண்டு. இந்த முழுத் தாவரமும் மருத்துவப் பலன்கள் நிறைந்தது. இதன் இலைகளை வாயில் இட்டு மென்று சுவைத்தால், கொழகொழ எனப் பசை போன்று இருப்பதை உணர முடியும்.
அபியங்கம் - ரிலாக்ஸ் மசாஜ் தெரப்பி
மசாஜ் என்றதும் சொகுசு பார்லர், ஸ்பாக்களில் வழங்கப்படும் உடலுக்கு இதம் தரும் சிகிச்சை என்ற எண்ணம்தான் பலருக்கும் உள்ளது. தாய் மசாஜ், ஹாட் ஸ்டோன் மசாஜ், அரோமா தெரப்பி மசாஜ் என்று விதவிதமான மசாஜ்கள் உள்ளன. அவரவர் உடலுக்கு, பருவ காலத்துக்கு ஏற்ப, மூலிகை எண்ணெயைப் பயன்படுத்தி, முழு உடலுக்கும் செய்யப்படும் நம் பாரம்பரிய ஆயுர்வேத மசாஜ் பற்றி பார்ப்போம். ‘அபியங்கம்’ எனப்படும் முழு உடலுக்கான எண்ணெய்
Wednesday, July 27, 2016
தேமலை குணப்படுத்தும் நாயுருவி!
நாயுருவி... பேரைக் கேட்டதுமே சிலபேர் முகம் சுளிக்கலாம். ஆனால், இந்த மூலிகையை முறைப்படி பயன்படுத்தினால் கைமேல் பலன் கிடைக்கும். மிகவும் சாதாரணமாக ரோட்டோம் வளர்ந்து கிடக்கக்கூடிய நாயுருவியின் இலையும், வேரும் மிகுந்த பலன்தரக்கூடியவை.
நாயுருவி இலைச்சாற்றில் கடுக்காய்த் தூள் இரண்டு கிராம் அளவு சேர்த்துச் சாப்பிட்டு வர, பெண்களுக்கு வரக்கூடிய வெள்ளைப்படுதல் உடனே குணமாகும். நாயுருவி இலையுடன் நாட்டு
Tuesday, July 26, 2016
ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய 7 மூலிகைகள்!
மாறிவரும் உணவுப் பழக்கவழக்கங்கள், வேலைச் சுமை போன்ற பல்வேறு காரணங்களால் நம் உடல்நிலை அடிக்கடி பாதிப்புகளுக்கு உள்ளாகிறது. அவற்றை எல்லாம் கைவைத்தியத்தில் சரிசெய்துகொள்ளும் வகை யிலும், ஆரோக்கியத்துக்கு உடனடியாகப் பயன்தரக்கூடிய வகையிலும் ஒவ்வொரு வீட்டிலும் வளர்க்கவேண்டிய மருத்துவ குணம்நிறைந்த மூலிகைச் செடிகள் பற்றிச் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர் வேலாயுதம்.
Saturday, July 9, 2016
சளியை விரட்ட இஞ்சி
மழைக்காலம் துவங்கியாச்சு..! இனி குழந்தைகளின் ஐஸ்கிரீம் ஆசைக்கு தடை தான். காரணம், மழைக்காலம் என்றாலே குழந்தைகளுக்கு சளி பிரச்னைகள் அதிகமாக இருக்கும். இந்த சமயங்களில், இஞ்சி சாறு குழந்தைகளுக்கு நல்ல நிவாரணமாக இருக்கும்.
Tuesday, July 5, 2016
விஷம் முறிக்கும் சிறியாநங்கை
பூண்டு வகையைச் சேர்ந்த ஒரு மூலிகைச் செடி சிறியாநங்கை. தென்னிந்தியாவில் பரவலாகக் காணப்படுகிறது. சிலர், நிலவேம்பை சிறியாநங்கை எனத் தவறாகக் கருதுகின்றனர். நங்கை எனும் வகைத் தாவரத்தில் பெரியாநங்கை, சிறியா நங்கை, வளநங்கை, வேப்பிலைநங்கை என நான்கு வகை இருக்கின்றன.
Friday, July 1, 2016
நாவல் தரும் நலம்
அந்தந்த சீசனில் கிடைக்கும் பழங்களை, தவறாமல் சாப்பிட்டால், அதில் உள்ள சத்துக்கள், குறிப்பாக வைட்டமின்கள், தாதுக்கள் போன்ற நுண்ணுாட்டச் சத்துக்கள் அடுத்த சீசன் வரை, உடலுக்கு பலன் தரும். இப்போது நாவல் (நாகப்) பழ சீசன். எளிதாகக் கிடைக்கக் கூடிய, விலை குறைந்த பழங்கள் இவை. எனவே தாராளமாக அனைவரும் சாப்பிடலாம்.
Thursday, May 26, 2016
ஒரு துளி... சிறுதுளி...
சமையலில் நாம் பயன்படுத்தும், ஒரு துளிப் பெருங்காயம் பல மருத்துவ நன்மைகள் கொண்டது.
# எல்லா விதமான அஜீரணக் கோளாறுகளுக்கும் பெருங்காயம் பயன்படுகிறது.
Thursday, May 19, 2016
சர்க்கரையை குறைக்க பட்டை!
பதப்படுத்தப்பட்ட உணவுகளால் ஏற்படும் உடல் பிரச்னைகள் பற்றி நிறைய இளைஞர்கள் கவலைப்படுவதில்லை. விளைவு, உப்பும், சர்க்கரையும் தேவையற்ற கொழுப்பும் உடலில் சேர்ந்து விடுகின்றன.
Friday, May 13, 2016
தோல்காக்கும் இஞ்சி!
* தேநீர் மற்றும் சில உணவுகளில் வாசனைக்காக பயன்படுத்தப்படும் இஞ்சியில், 40 விதமான, 'ஆன்டி ஆக்சிடென்ட்'கள் உள்ளன.
* இஞ்சியில் உள்ள இந்த ஆன்டி ஆக்சிடென்ட், வயோதிகத்தை தாமதப்படுத்தி தோலுக்கு புத்துணர்வு தருகிறது.
* உடலில் உள்ள நஞ்சை வெளியேற்றுவதோடு, சீரான ரத்த ஓட்டத்திற்கு இஞ்சி உதவுகிறது.
Tuesday, May 10, 2016
நஞ்சு முறிக்கும் அவுரி
நீலி எனப்படும் குறுஞ்செடி வகையைச் சேர்ந்த அவுரி, பல மருத்துவப் பலன்களைக்கொண்டது. சிறந்த நஞ்சு நீக்கி. முற்காலத்தில் விவசாய நிலங்களில் அவுரியைப் பயிரிட்டு மண்ணில் இருக்கும் நச்சுகளை அகற்றுவார்கள். அவுரி இலையும் வேரும் பல்வேறு வகையில் பயன்படுபவை.
Sunday, May 8, 2016
ஸ்... அப்பப்பா... என்ன உஷ்ணம்...!
வெல்லம்: வெயிலில் போகும்போது, என்ன தான் கையில் தண்ணீர் பாட்டிலை தவறாமல் எடுத்துச் சென்றாலும், சமயங்களில் நாக்கு வறண்டு போகும். இதைத் தவிர்க்க வெல்லம் அல்லது கருப்பட்டியை சிறிதளவு வாயில் போட்டுக் கொண்டால், உடனடியாக வறட்சி தீரும்; களைப்பு நீங்கும்.
Sunday, May 1, 2016
நலம் காக்கும் கற்றாழை
வீட்டின் வராண்டாவிலோ, ஜன்னல் ஓரத்திலோகூட சிறிய தொட்டிகளில் வளர்க்கக்கூடிய எளிய மூலிகை, கற்றாழை. உடலுக்குப் பல்வேறு நன்மைகளை அளிக்கும் கற்றாழை, சருமத்தையும் பாதுகாக்க உதவுகிறது.